வியாழன், 26 ஏப்ரல், 2012

தொன்மா

                                                         
 தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன்ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ளவிலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க:ஒருநிலக் கொள்கை). தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.


தொன்மா என்னும் பெயரும் அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும்,தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும்வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids),இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிறமீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர்,பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலிஅளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன. அக்காலத்தில் பூக்கும் மரம்செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபாடு என்னும் ஒரேயொரு இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர்டைமெட்ரான்போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர்,பிளெசியோசோர்மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல. தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.
தொன்மா கண்டுபிடிப்பு                                                                          
ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்ததொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதியடயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர். கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார்.
தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் .
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சிலஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும்,அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை. 
உருவ பரும வேறுபாடுகள்                                                                 

அளவை ஒப்பிட்டுப் பார்க்கஇயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.
சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக்காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.
பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) 
தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்

ALM . FAIZAN  
இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012


ஒட்டகம்

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.

ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது. மற்ற விலங்குகளை போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆஸ்மாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை)

உலகின் இரண்டாவது குளோனிங் ஓட்டகம்

ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34 ° செல்சியஸ் முதல் 41 ° செல்சியஸ் (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3 ° செல்சியஸ் வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.

ஒட்டகச் சிவிங்கி

 பெயர்க்காரணம்

ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும். தற்போது உலகில் இருக்கும் விலங்குகளில் உயரமானது ஒட்டகச் சிவிங்கி தான். ஒட்டகம் மாதிரி உயரமாகவும், புலி இனங்களில் ஒன்றான சிவிங்கி (Leopard) மாதிரி புள்ளிகளை பெற்றிருப்பதாலும் இந்தப் பெயர் வந்தது. ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீட்டர்) 900 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிட பொதுவாக உயரத்திலும் எடையிலும் குறைந்தவை. ஒட்டகச் சிவிங்கி இரு சோடி கால்களும் ஒரே நீளமுள்ளவை என்றாலும் தோள்பட்டை எலும்புகள் மிகவும் நீண்டு வளர்ந்திப்பதால் அவற்றோடு இணைந்துள்ள முன்கால்கள், பின்னங்கால்களை விட உயரமாக இருப்பது போல தோன்றும். (ஆதாரம் தேவை) இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.

சாதுவான விலங்கு

ஒட்டகச் சிவிங்கிகள் வெப்பமான வறண்ட பகுதிகளில் தான் வாழ்கின்றன. மர இலைகளைத் தின்று வாழ்கின்றன. மர இலைகளை வாயில் திணித்துக்கொள்வதற்கு வசதியாக நாக்கு நீண்டிருக்கிறது. நாக்கின் நீளம் 45 செ.மீ. நாக்கை வேண்டும்போது நீட்டிக்கொள்ளலாம், சுருக்கிக் கொள்ளலாம். இரை உண்ணும் போதும், புழுதிக்காற்று வீசும்போதும் இது தனது மூக்குத் துவாரங்களை மூடிக்கொள்கிறது. ஒட்டகம் போலவே நாள் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் தாக்குப்பிடிக்கும். தண்ணீர் குடிக்கும் போதும் கொஞ்சம் தான் குடிக்கும். தரையில் உள்ள சிறு தாவரங்களை உண்ணும்போது முன் கால்களை பரப்பிக்கொள்ளும். அப்போது தான் வாய் தரைக்கு வரும். ஒட்டகச் சிவிங்கிகள் குரல் எழுப்பி சத்தம் போடாது. மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் கோபம் வந்தால் பின்னங்கால்களால் உதைக்கும். உதைக்கும்போது பலமாக அடிபடும். சிங்கம் தான் இதன் முக்கிய எதிரி. வலிமை மிகுந்த சிங்கத்தை கூட தனது பின்னங்கால்களால் பலமாக உதைத்து காயப்படுத்தும். மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை ஓடும். 14 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன.

அழிந்துவரும் விலங்கு

ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீளமாக இருந்தாலும், அதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. பொதுவாக பாலூட்டி விலங்குகள் எல்லாவற்றுக்குமே கழுத்தில் ஏழு எலும்புகள் உண்டு. மிக சிறியதாக இருக்கும் சுண்டெலிக்கு கூட இது உண்டு. நீண்ட கழுத்தை உடைய ஒட்டக சிவிங்கிக்கும் அது உண்டு. கழுத்தில் குட்டையான பிடரி ரோமங்கள் இருக்கும். இதன் கொம்புகள் தோலாலும், ரோமத்தாலும் மூடப்பட்டிருக்கின்றன. முனைகளில் குஞ்சம் போன்ற ரோமங்கள் உள்ளன. அழிந்துவரும் விலங்கின பட்டியலில் ஒட்டகச்சிவிங்கியும் உண்டு தோலுக்காக
இது வேட்டையாடப்படுகிறது.



கரடி

கரடி (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு. இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும். ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.
உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைகுறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகள் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை.

கரடி இன வகைகள்

  • பனிக்கரடி
  • கொடுங்கரடி
  • அமெரிக்கக் கருங்கரடி
  • வெண்கண்வளையக் கரடி இரு கண்களைச்சுற்றியும் இருவெள்ளையான வளையம் இருப்பதால் இதனை மூக்குகண்ணாடிக் கரடி என்றும் அழைப்பர்.
  • அசையாக்கரடி சுலாத்துக் கரடு (Sloth bear)
  • ஆசியக் கருங்கரடி
  • மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.

தமிழில் "கரடி" என்ற சொல் பாவனை

  • கரடி சந்தை
  • 'கரடி' விடுறது
  • சிவபூசையில் 'கரடி' போல
  • கரடிபோலே வந்து விழுந்தான்
  • கரடிக்கூடம்
  • கரடிப்பறை
  • கரடிகை
  • கரடியுறுமல்
  • கரடிவித்தை



                                                                                                                   
                                                                                                              

பசு

பசு (மாடு) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள்.

படங்களின் தொகுப்பு


திங்கள், 13 பிப்ரவரி, 2012

  • அறுக்குளா
  • அவுரி - CHANNA MARULIUS
  • அம்புட்டன் வாழ - CHITALA CHITALA
  • அனுவ மீன் - DIPLOPRION BIFASCIATUM
  • அத்வாணி திருக்‍கை - GYMNURA POECILURA
  • அடுக்குப்பல் சுறா - HEMIPRISTIS ELONGATA
  • அவிலி (அவீலீ) - LIZA
  • அமட்டீகாட்டீ - MENE MACULATA
  • அம்பட்டண் கத்தி - NOTOPTERUS NOTOPTERUS
  • அதவாழன் திருக்‍கை - PISTANACHUS SEPHEN
  • அகலை - RASTRALLIGER KANAGURTA
  • அமீனீ உளுவை - RHICODON TYPUS
  • அடுப்பு பொறுவா - THRYSSA MALABARICA

  • ஆட்கான்டி - BARILLIUS GATENSIS

  • இருங்கெளுத்தி - PLOTOSUS கனிஸ் 
ஒ 
  • ஒட்டி

  • ஓரா

  • கட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.
  • கயல்
  • கருமுறைச்செல்வி
  • கருந்திரளி
  • கலவாய்
  • காரல் மீன்
  • காரப்பொடி
  • கிழக்கன்
  • கீச்சான் - TERAPON JARBUA
  • கீச்சான் -TIGERFISH
  • கிளி மீன்
  • கீரி மீன்- AMBLYGASTER CLUPEOIDES
  • கீளி மீன்
  • குஞ்சுப்பாரை
  • குதிப்பு - False trevally (Lactarius spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.
  • கும்புளா
  • கும்டுல் - SCOPLOPSIS TAENIOPTERUS
  • கூந்தா
  • கூரல்
  • கெலவல்லா
  • கெழுத்தி - Catfish (பொதுப் பெயர்)
  • கெளிறு
  • கெண்டை - Carp (பொதுப் பெயர்)
  • கொடுவா - Asian seabass, called as barramundi in Australia.
  • கொண்டை - salmon
  • கொய்
  • கோலா மீன் - COROMANDEL FLYING FISH
  • கோரோவா - BLOTCHED CROAKER, NIBEA MACULATA
  • கோர சுறா - BROADFIN SHARK, LAMIOPSIS TEMMINCKII
  • கோலா -HIRUNDICHTHYS COROMANDELENSIS

  • சங்கரா
  • சாம்பல் மீன் - Grey mullet
  • சாளை - Sardines
  • சிறையா
  • சுறா- Shark
  • சுதும்பு- False trevally (Lactarius spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது
  • சூரைமீன் - Tuna
  • சூடை - Sardines
  • சூடைவலை
  • செவ்விளை - Red snapper
  • சீலா - தென் தமிழகத்தில் Seer fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • சாதா கெண்டை - Common carp
  • செம்மீன் - Shrimp or prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.
  • சிலேபி(ஜிலேபி) - Tilapia

  • டொல்பின் இது பாலூட்டி. மீன் அல்ல.

  • திருக்கை - Skates and Rays
  • திரளி
  • திமிங்கலம்- whale (பாலூட்டி. மீன் வகையல்ல)
  • திலாப்பியா - tilapia
  • தளபொத்து

  • நவரை
  • நெத்திலி - Anchovy

 

  • பாரை மீன்
  • பாலை மீன்
  • பால் மீன்
  • பளயா
  • புல் கெண்டை - Grass carp
  • பன்னா மீன்


  • மணலை
  • முரல்
  • மண்ணா
  • மிர்கால், மிருகால் - Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று
  • மத்தி மீன்
  • முண்டான்

  • ரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.

  • லோகு
  • வஞ்சிரம் மீன் - Seer fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது
  • வவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது
  • வளையாமீன்
  • வாளை மீன் - Belt fish or Ribbon fish.
  • விளை - Emperor fish
  • விரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia
  • விலாங்கு - Eel
  • வெள்ளிக் கொண்டை - Silver carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று
  • வெள்ளைக்கிழங்கா
  • வெள்ளை அரிஞ்சான் - CIRRHINUS CIRRHOSUS
  • வெள்ளி அரிஞ்சான் - ENCHELIOPHIS HOMEI
  • வாளை மீன் - SWORD-FISH

புதன், 8 பிப்ரவரி, 2012


பொன் மீன்

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் நன்னீர் மீன்களில் பொன்மீன் (Gold Fish) எனப்படும் மீன் மிகப் பிரபல்யமானதாகும். சைபிரினியா (Cyprinidae) எனும் கார்ப் (Carp) குடும்பத்தைச் சேர்ந்த இம்மீனினத்தின் விலங்கியல் பெயர் கராசியஸ் ஒராட்டஸ் (Carassius auratus) என்பதாகும். இந்த இனம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படுகின்ற கராசியஸ் வெல்கரிஸ் (Carassius vulgaris) எனும் மீனினத்திலிருந்தே தோன்றியிருக்கிறது.

நிற வகைகள்

பொன் மீனில் பொதுவான நான்கு நிற வகைகள் காணப்படுகின்றன. நரை நிறம், கறுப்பு, சிவப்பு, நிறமற்றது என்பனவே இவ்வகைகளாகும். எனினும், இவை தவிர்ந்த வேறு நிறமுள்ள வகைகளும் அசாதாரண வடிவமுடையனவும் உண்டு. இவை பெரும்பாலும் நோய் நிலை காரணமாக ஏற்படும் வடிவ மாற்றங்களாகும். மண்டையோட்டுக்கு வெளியே நீண்டிருக்கும் விழிக்கோளங்களைக் கொண்டவை, இரட்டை வாலுடையவை, வால் இல்லாதவை, அசாதாரணமாக நீண்ட செட்டைகளை உடையவை முதலின இவ்வாறான திரிபு வடிவங்களாகும்.

நிறை

பொதுவாகப் பொன் மீன்கள் ஏனைய கார்ப் (Carp) குடும்ப மீன்களை விட நிறையில் குறைந்தவை. எனினும், 5 கிலோகிராம் வரை நிறையுடைய பொன்மீன்களும் இருந்துள்ளன.

வரலாறு

பொன்மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கும் வழக்கம் கி.பி. 960ம் ஆண்டளவில் சீனாவில் ஆரம்பமாகியிருக்கின்றது. நீண்ட வாலுடைய பொன்மீன் வகையொன்று முதன்முதலாக டச்சுக்காரர்களால் 17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இதனை அவர்கள் ஜாவாப் பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்.

ஆயுள் காலம்

வீடுகளில் வளர்க்கப்படும் பொன்மீன்கள் சுமார் 25 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடும். எனினும், இயற்கையாக நீர் நிலைகளில் வாழ்பவை குறைந்த ஆயுளுடையவை. பறவைகளும், நீர்வாழ் முலையூட்டிகளும், ஏனைய மீன்களும் வளர்ந்த பொன் மீன்களை இரையாகக் கொள்கின்றன. பொன்மீன் குஞ்சுகளுள் 80 சதவீதமானவை நோய்களுக்கும், நீர்வாழ் பூச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி இறந்துவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சனி, 4 பிப்ரவரி, 2012

கரு நாகத்தின் பழக்கவழக்கங்கள்

      இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. பெருகிவரும் காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால் இவ்வினம் அழிவை சந்தித்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும் இவ்வினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அழிந்துவரும் உயிரினங்களுக்கான 'சிகப்பு பட்டியலில்' சேர்க்கப்படவில்லை.

வேட்டையாடும் முறை

இந்த இனமானது, மற்ற பாம்புக்ளைப் போலவே தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது. இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது. தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, இருகாது கேள்விபோல் (stereo) உணர்ந்து துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்கின்றது இதன் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.
இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

தற்காப்பு முறைகள்

பொதுவாக இவ்வகை பாம்புகள் தனது இரையைத் தவிர மற்றவர்களை தாக்குவதில்லை. தனது வழியிலேயே செல்கின்றன. இதை தவிர்த்து எதிரிகள் இதன் வழியில் குறிக்கிடும் பொழுது, தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவை தனது உடலை, தரையில் இருந்து பல அடி எழுந்து உயர்த்தி காட்டுகின்றன. பின் படம் எடுத்து காட்டுகின்றன. மேலும் 'ஸ்ஸ்ஸ்' என்று காற்றொலி எழுப்புகின்றன. தனது சக்தியை, எதிரிகளுக்கு காட்டும் பொருட்டே இவை இவ்வகையான செயல்களில் ஈடுபடுகின்றன. இதையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கும்பொழுதே, இவை அவற்றை தாக்கி அதன் உடலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.

நஞ்சு


 
கருநாகத்தின் மண்டை ஓடு, பக்கவாட்டுத் தோற்றம்
கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும்.இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.
உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை கருநாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.
இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர்.

இனப்பெருக்கம்

இந்த இனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. தாய் கருநாகமானது தனது நீள உடல் முழுவதையும் மலையடுக்கு போல வட்டமாக சுருட்டிக்கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இடுகின்றது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் தான் இட்ட முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும். பெரிய விலங்குகள் அருகில் வந்தாலொழிய இவை, அடைக்காப்பதை விட்டு விலகுவதில்லை. இவ்வினத்தின் இனச்சேர்க்கை சனவரியிலிருந்து மார்சு மாதம் வரை நடக்கும், பின் ஏப்ரலிலிருந்து மே மாதம் வரையில் பெண் முட்டைகளை இடும்.

படத்தொகுப்பு

கரு நாகத்தின் அமைப்பு        :-      
      
பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இதற்கு மேலாக லண்டன் உயிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பளுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினால பட்டைகளுடன காணப்படுகின்றன. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவத்திலன கட்பார்வை கொண்டவையாகும். கருநாகத்தின் தோலில் பாம்புச் செதில்கள் காணப்படும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும்.ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள் ஆகும்.




கருநாகம்

கருநாகம் அல்லது இராச நாகம் (King Cobra) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது). . பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012


ஆபிரிக்க ஆசிய யானைகளிடையான ஒப்பீடு

ஆபிரிக்க யானை 4 மீட்டர் நீளம் வரை உயரமும் சுமார் 7 டன் வரை எடையும் கொண்டு விளங்குகின்றது. ஆசிய யானையைப் பொருத்த வரையில் அளவில் ஆப்பிரிக்க யானையைக் காட்டிலும் உயரத்திலும் எடையிலும் குறைவானதாகும். அதிக பட்சமாக 5 டன் எடை வரை இவை வளரக்கூடியன. ஆப்பிரிக்க யானையின் காது அதன் தோல்புறத்தைக் முழுதும் மறைக்கும் முகமாக அமைந்துள்ளது. இவற்றின் காது 1.5 மீட்டர் நீளமும் 1.2மீட்டர் அகளமும் உடையது. ஆசிய யானையின் காது அமைப்பு தோல் புறத்தை காட்டிலும் தாழ்ந்து அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்க யானையின் ஆண் பெண் இரண்டிற்கும் தந்தம் வளர்ச்சியடைகின்றது. ஆசிய யானை வகைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தம் வளர்ச்சியடைகின்றன. பெண் யானைகளுக்கு வளர்ச்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு மிக சிறிய அளவிற்கே வளர்ச்சியடைகின்றது. ஆப்பிரிக்க யானையின் தும்பிக்கையின் முனையில் இரு உதடைப் போன்ற பற்றி பிடிக்கும் தசைப் பகுதியும் ஆசிய யானையின் தும்பிக்கை முனை ஒரு பற்றிப் பிடிக்கும் தசைப் பகுதியும் அமையப் பெற்றுள்ளன. ஆசிய யானையின் கால்களின் விரல் நகம் முன்காலில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும், ஆப்பிரிக்க யானைகள் முன் கால்களில் 4 அல்லது 5 நகங்களும், பின்புறக் கால்களில் மூன்று நகங்களும் பெற்றுள்ளன. பொதுவாக யானைகள் வெளிர் சாம்பல் நிறத்தையுடையவனாவாக இருப்பினும் இவைகள் குலம் மற்றும் குட்டைகளின் சேற்று சகதிகளில் புரண்டெழுவதனால் சேற்றின் நிறத்திற்கொப்ப அடர் சாம்பல், சிகப்பு, மற்றும் பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றது.